Friday, April 3, 2026

Small Story 580.T

 

சிறுகதை 570
சரியான நேரத்தில் நடந்த சந்திப்பு
குப்தா தனது வழக்கமான காய்கறி கடைக்கு சென்றார். காய்கறிகளை வாங்கி முடித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தார். அப்போது திடீரென யாரோ “ஹே குப்தா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று அழைத்தார்.
அவர் திரும்பிப் பார்த்தார். அவருடைய சக ஊழியர் பார்த்தா அங்கே நின்றிருந்தார். இருவரும் பால் கூட்டுறவுச் சங்கத்தில் கணக்கு அலுவலர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
பார்த்தா சொன்னார், “மன்னிக்கவும் குப்தா, உங்களை தொந்தரவு செய்கிறேன். என் தம்பியின் மகன் மேனேஜ்மெண்ட் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) படித்திருக்கிறார். அவருக்கு ஒரு வேலை பரிந்துரைக்க முடியுமா? அது எங்கள் குடும்பத்திற்கு பெரிய உதவியாக இருக்கும். நான் ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். நீங்கள் பலருக்கு உதவியிருக்கிறீர்கள்.”
குப்தா மெதுவாக புன்னகைத்து, “இது எல்லாம் கடவுளின் அருளால் நடந்ததே. நான் இதை நினைவில் வைத்துக்கொள்கிறேன். இப்பொழுது போய்வருகிறேன்,” என்றார்.
வீட்டிற்கு திரும்பிய குப்தா குளித்து பூஜை செய்தார். அப்போது அவரது மனைவி நினைவூட்டினார்: “என்னங்க, வீட்டுச் செலவுக்கு பணம் எடுக்க மறந்துட்டீங்க. இன்று எரிவாயு சிலிண்டர் வரப் போகுது.”
“பிரச்சினையில்லை,” என்றார் குப்தா. “நான் ஏடிஎம் சென்று பணம் எடுத்துக்கொண்டு வருகிறேன்.”
அவர் தனது அபார்ட்மென்ட் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றார். கார்டை உள்ளே செலுத்த முயன்றபோது அது செல்லவில்லை. அப்போது முன்னால் வந்தவர் தங்களுடைய கார்டை உள்ளே விட்டுவிட்டு சென்றிருப்பதை கவனித்தார். சுற்றிலும் யாரும் இல்லாததால், அவர் அங்கே காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் வங்கி சேவை பணியாளர் ஒருவர் ஏடிஎம் நிரப்ப Vanthaar குப்தா அந்த கார்டை அவரிடம் கொடுத்து, “இதன் உரிமையாளரை வங்கி மூலம் கண்டுபிடித்து, என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்,” என்று தனது தொலைபேசி எண்ணையும் வழங்கினார்.
பணம் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு திரும்பினார்.
மாலை ஐந்து மணியளவில் அவரது கைபேசி மணி அடித்தது. “வணக்கம், நீங்கள் குப்தாவா? நான் கோவிலின் அருகில் இருக்கிறேன். என் கார்டை திருப்பி கொடுத்ததற்காக உங்களை சந்தித்து நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்றார் ஒருவர்.
குப்தா தனது முகவரியை கூறினார்: “என்க்ளேவ் அபார்ட்மென்ட்ஸ், ஃப்ளாட் எண் 101.”
15 நிமிடங்களில் கதவு மணி அடித்தது. கதவை திறந்த குப்தா, நாற்பது வயதிற்கும் மேற்பட்ட ஒரு பெண்ணை பார்த்தார். அவரை உள்ளே வர அழைத்தார்.
அவர் தன்னை நந்தினி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது ஏடிஎம் கார்டை மீட்டுத் தந்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவித்தார். செல்லும்போது தனது விஜிடிங் கார்டை கொடுத்து, “நான் ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை நடத்துகிறேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையாயின் அல்லது யாரையும் பரிந்துரைக்க வேண்டுமெனில் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்,” என்றார்.
அவர் விரைவாக கிளம்பி, பின்னர் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
குப்தா அந்த கார்டைப் பார்த்து புன்னகைத்தார் — அது உண்மையிலேயே ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம். உடனே பார்த்தாவின் தம்பியின் மகன் கார்த்திக் நினைவுக்கு வந்தார். இந்த வாய்ப்பு அவருக்கு ஒரு வேலை கிடைக்க உதவக்கூடும்.
அதே நேரத்தில் சுவர் கடிகாரம் ஆறு மணி அடித்தது. குப்தாவின் மனதில் அமைதியான மகிழ்ச்சி பொங்கியது.
– கே. ராகவன்
4-4-26

No comments: