Sunday, April 17, 2022

Tribute to Writer ,Indira Parthasarathy. 709.

இன்று நான் பாராட்ட இருக்கும் மனிதர்,சிறந்த எழுத்தாளர்,நாவலாசிரியர் ,மற்றும் திரை பட உலகில் பெயர் பெற்றவர்,அவர் வேறு யாரும் இல்ல .மிகசிறந்த கதாசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்தான்.இ பா என்ற புனைபெயரில் ,பல சிறுகதைகள் ,நாவல்கள்,நாடகங்கள் மற்றும் நிறைய படைப்புகள் படைத்த அதி அற்புத மனிதர்.கற்பனை வளம் ,எந்த சூழ்நிலையிலும்,படைக்கக்கூடியவர்.சாஹித்திய அகாடமி விருது , மற்றும் பல விருதுகளை பெற்றவர்.எளிமையானவர்,அன்புடன் பழகக்கூடியவர்.இவர் படைத்த படைப்புகள் எண்ணிலடங்கா .குருதிப்புனல் நாவல் திரைப்படமாக வந்துள்ளது .தீவுகள், மயமான்வேட்டை ,இரண்டு கதை இவரின் படைப்புகளில் நான் படித்த நினைவு.பல கதைகள் எனக்கு நினைவிலில்லை.தமிழ் இலக்கிய உலகத்திற்கு எண்ணற்ற கதாசிரியர்கள் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்து பெருமை சேர்த்து உள்ளார்கள் என்றால் அது மிகை இல்லை.நான் எனது பதிப்புகளில் ஒவ்வொரு ,திங்கள்கிழமை அன்று ,யார்,யார் அவர்கள் துறையில் சிறந்த பணியாற்றி உள்ளார்களோ அவர்களை பற்றி எனது பதிப்புகளில் கடந்த 14 வருடங்களாக பதிவு செய்து வருகிறேன்.இது எனக்கு பரிபூரண திருப்தியை கொடுக்கிறது.திறமை எங்கு இருந்தாலும் ,அதை பாராட்டவேண்டும் என்பது எனது கருத்து . இன்று இந்த தலை சிறந்த கதாசிரியரை பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன். .இதில் ஏதாவது பிழை இருந்தால் ,பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் கே.ராகவன் 18-4-22.

No comments: