Monday, August 9, 2021

Letter to My Friend Shankar Krishnamurthy.

 அன்பு நண்பர் சங்கருக்கு வரையும் மடல்.பத்து   வருடத்திற்கு மேல் முக நூலில் தொடங்கிய நம் நட்பு நன்றாக நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவது இன்னும் வளருவது  இறைவனின்  விருப்பம்..தங்கள் ,எண்ணங்கள் ,மற்றும் குணாதிசயங்கள் ,என்னை கவர்ந்ததுக்கு ஒரு காரணம் ,என் எண்ணங்களும் ,அதே போல் இருப்பதுதான்.தங்கள் ,கருத்துக்கள்,விவாதமேடை பேச்சுக்கள் எல்லாம் என்னை  மிகவும் ஈர்த்துவிட்டது.கடந்த ஐம்பத்து  ஆறு வருடங்களாக , கதை ,கட்டுரை எழுத்தின் மீது எனக்கு இருந்த அளவு கடந்த  பற்றின் பால் மேலும் நமது நட்பு சமீபத்தில் மிக இருக்கமாகிவிட்டது என்பது உண்மை.தனியாக  உங்கள் பிறந்த நாள் ,வாழ்த்துக்கள் என்று சொல்வதைவிட என் ஆசீர்வாதங்களை உங்களுக்கு  இதய பூர்வமாக வழங்க ஆசைப்படுகிறேன்.வயதில் ,மூத்தவன் என்கின்ற  உரிமையில்.தனியாக அனுப்பும் வீடியோ ரெகார்டிங் நாளை காலை முதலாக நீங்கள் கேட்கவேண்டும் என்பது என் அவா .இறைவன் ,உங்களையும் ,துணைவியாரையும் , நோய் நொடி இல்லமால் தேக  ஆரோக்கியத்துடன் மற்றும் உங்கள் திரை பட சாதனைகள்  வளர வேண்டும்  ,இன்று போல் நம் நட்பு என்றும் இருக்க வேண்டும் என்று  இந்த  மடலை  பூர்த்திசெய்கிறேன்.

அன்புடன் 

நண்பன் 

கே.ராகவன் 

No comments: