Thursday, August 12, 2021

Six Decades of Muktha Films and the Architect.

 இதில் ஏதாவது  பிழை இருந்தால் பொருட்படுத்த வேண்டாம்.

முக்தா  பிலிம்ஸ் ராமசாமி,ஸ்ரீனிவாசன் சகோதரர்களால் ,ராமசாமியின் மகள் முக்தா பெயரில்  பிரபல இயக்குனர் கே.சுப்ரமணியம் அறிவுரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பாக  நேர்மை,கடின உழைப்பு இருந்தால் சாதனை  செய்ய முடியும் என்பதை உணர்த்தியவர் மறைந்த   முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள்.திரைப்பட  தயாரிப்பாளர்,இயக்குனர் என்கின்ற பொறுப்புகளை திறம்பட வகித்து தன்னுடைய ஸ்தாபனம்முக்தா   பிலிம் ஸ் அறுபது வருடங்கள் வளர செய்து ஐம்பத்துக்கும் மேற்ப்பட்ட தரமான திரை படங்களை மக்கள் மத்தியில் உலாவ செய்த ஒரு அற்புதமான மனிதர் இன்று இல்லை.ஆனால்  அவர் ஸ்தாபித்த முக்த பிலிம்ஸ் அறுபது வருடங்கள் நிறைவுபெற்று விழா கொண்டாடுகிறது என்பது சாதாரண விஷயம் இல்லை.சமீபத்தில் அவர் குடும்பத்தார்கள் ரவி,அவர் சகோதரர் ,சகோதரி  இந்த விழாவினை மிக சிறப்பாக கொண்டாடினார்கள் என்பதை நினைக்கும் போது  முக்தா  அவர்கள் இன்னும் நம் உடன் இருபது போல் உணர்வு ஏற்படுகிறது.கடந்த ஐம்பது  வருடங்களுக்கும் மேல் நான் அவர் தயாரித்து இயக்கிய பல படங்களை  கண்டு மகிழ்ந்து இருக்கிறேன் .மறைந்த மக்கள் திலகம் ஒருவரை  தவிர மற்ற எல்லா பிரபலங்களும் இவர் படத்தில் நடித்து முன்னுக்கு வந்தவர்கள்..மறைந்த பாடலாசிரியர்  வாலி அவர்கள் முக்தா  அவர்களினால்  தன் திரையுலக 

வாழ்கை துவங்கியது என்பதை ஒரு  நிகழ்ச்சியில்

கூறியுள்ளார் .சிறந்த கதை ,உரையாடல் ,மற்றும் அவரின் இயக்குனர்


 முத்திரை அவர் படங்களில்  பரிமளிக்கும்.உழைப்பு ,திறமை  இது இரண்டையும் நம்பியவர் .எளிமையானவர்,,எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும் பழகக்கூடியவர்.என்னை ,இந்த விழா 

மிகவும் கவர்ந்ததுக்கு காரணம், ரவியும் அவர் சகோதர சகோதரியும் .

ஆரம்ப காலத்தில் இருந்து தங்கள் தந்தையார் ,படங்களில் நடித்த 


அணைத்து கலைஞர்களையும் ,தொழில் நுட்ப கலைஞர்களையும் 


இந்த விழாவிற்கு அழைத்தது தான்.ஒரு உண்மையான ,முதலாளி 



தன்னுடன் இருந்தவர்களை மறக்க மாட்டான் ,என்பதை இந்த 



முதலாளி வெற்றிப்பட இயக்குனர் ,குடும்பம் மறக்கவில்லை என்பது 

என்னை மிகவும் ஈர்த்தது  .ஸ்தாபித்த இருவரும் இப்போது இல்லை. ஆனால் அவர்கள் ஸ்தாபித்த இந்த நிறு வனம் ஆலமரம் போல் நம் முன்  நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது..ரவி,அவர் சகோதரர் சுந்தர் மற்றும் சகோதரி 

மாயா அவர்கள்  அம்மா ,மற்றும் குடும்பத்தார் அனைவர்களும் நீண்ட காலம் ,தேக ,ஆரோக்கியத்துடன் 


இருக்க இருக்கவேண்டும் என்று ஆச்சரியனை பிரார்திக்கிறேன்.

அன்புடன் 


கே.ராகவன்.

12-8-21

பிளாக்கர் -ராகவன்-கிரீடிவிட்டி.ப்லாக்ஸ்பாட்.காம்

No comments: