Tuesday, May 28, 2024

Imaginatory Letter.

கற்பனை மடல். அன்புள்ள பாசமும்,நேசமும் உள்ள அம்மாவிற்கு உங்கள் அன்பு மகன் வரையும் மடல்.நேற்று நான் ஆஃபிஸில் சேர்ந்துவிட்டேன்.நல்ல சூழ்நிலை,நல்ல மனிதர்கள் பார்த்தவுடன் மனது குதூகலித்தது.நான் விரும்பி ,நீங்கள் அன்புடன் ,ஆசிர்வதித்து படித்த ஜௌர்னலிசம் ,என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியதில் வியப்பில்லை.உங்கள் ஒவ்வொரு அறிவுரையும்,எப்படி மற்றவர்களை அன்புடன் அரவணைத்து பழகவேண்டும் ,என்பதை நினைவுகூர்ந்து முதல் நாள் ,அலுவலக காரியங்களை கவனிக்கப்போகிறேன்.நான் உங்களை விட்டு வெகு தூரத்தில் இல்லை.ஆனாலும் தங்களை விட்டு ,பிரிந்து இருப்பது சற்று கடினம்.ஆனாலும் உங்கள் ஆசை படி நான் ஒரு பெரிய ஜௌர்னலிஸ்ட் ஆகா வருவேன்.உங்கள் பிரிவு என்னை மிகவும் பாதித்தாலும் ,நீங்கள் தினமும் எனக்கு உங்கள் ,அன்பான ,பாசமுள்ள ,வார்த்தைகளை அனுப்பினால் அது எனக்கு பெரிய ஊக்கமாக இருக்கும்.மீண்டும் உங்கள் பிரிவு என்னை பாதிக்காமல் இருக்க உங்கள் வார்த்தைகள் எனக்கு ,ஊக்குவிக்கும். உங்கள் ஆசை அன்பு மகன்.

No comments: