Thursday, May 30, 2024

Karpanai madal2

கற்பனை மடல் 2.அன்பு மகனுக்கு ,உன் அன்பான பாசமும் அன்பும் உள்ள அம்மா வரையும் மடல்.உன் மடல் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் .அலுவலகத்தில் எல்லருடன் ,அன்பாகவும் ,மரியாதையாகவும் பழகு.வேலையை , ஆழ்ந்த அக்கறையுடன் கற்றுக்கொள்.நீ தேர்ந்து எடுத்திருக்கும் தொழில் ,எல்லோராலையும் எடுத்துக்கொண்டு செய்யமுடியாது.திறமை,கற்பனை வளம் வேண்டும்.எனது அன்பான அரவணைப்பிலும்,மகிழ்ச்சி ஊட்டக்கூடிய சொற்களாலும் ,அததற்கும் மேலாக கடுவுளின் அருளும் உனக்கு பரிபூர்ணமாக உள்ளது.இருபத்தி ஐந்து வயது வரை உன்னை ஒரு கணமும் விட்டு பிரிந்ததியில்லை ,என்ற ஒரு ஏக்கம் தவிர ,உன் எதிர் காலம் முக்கியம்.வேல வேலைக்கு சாப்பிடு.மீண்டும் அடுத்த மடலில் வரைகிறான் அன்பும் பாசமும் உன்னை விட்டு பிராய முடியாத அன்பு அம்மா. கே.ராகவன்.

No comments: