அமெரிக்கா 250-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திரு. ஷ்ரீராம் ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பாகவும் மனதைத் தொடுவதாகவும் இருந்தது.
கணினி துறையின் மீது அவருக்கிருந்த ஆழ்ந்த ஆர்வம், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, மாணவராக இருந்தபோதே அமெரிக்கா மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை — இவை அனைத்தும் இறுதியில் நனவாகியுள்ளன. அவரது வாழ்க்கைப் பயணம் உண்மையிலேயே ஊக்கமளிப்பதோடும், பலருக்கு உந்துசக்தியாகவும் உள்ளது.
அமெரிக்கா 250-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இவ்வளவு அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் இந்தக் கட்டுரையை எழுதியதற்கும், தனது தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டதற்கும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
டைம்ஸ் ஸ்கொயரில் தனது நண்பர்களுடன் இணைந்த தனது புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதைப் பார்த்தபோது அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி மிகவும் மனதை நெகிழச் செய்தது. உலகம் முழுவதும் எண்ணற்ற சாதனையாளர்களையும், பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களையும் கௌரவித்து, அவர்களுக்கு உத்வேகம் அளித்த அடையாளமிக்க இடமாக விளங்கும் டைம்ஸ் ஸ்கொயரில் அந்த தருணம் அவருக்கு கிடைத்தது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று.
இந்த அற்புதமான சாதனைக்காக திரு. ஷ்ரீராம் ஸ்ரீதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
K.Ragavan
No comments:
Post a Comment