Sunday, June 2, 2024

Tribute 820.

ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களின் சாதனைக்கு பாராட்டு 820. சாதனை என்பது அளவில் இல்லை.ஒவ்வொரு அடியிலும் ,படிப்படியாக முன்னேறி ,பின்னாளில் சிறந்த மனிதனாக அவரவர் தொழில்களில் வருவது என்னை பொறுத்தவரை.ஒரு நபர் எந்த தொழில் இருந்தாலும் ,ஊக்கம்,விடா முயற்சி ,அதன்மேல் நாட்டம் இருந்தால் சாதனை செய்வார் என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை ,மற்றும் கண் கூடாக பார்த்தது.மற்றவர்களை பார்த்து நல்ல குணங்களை எடுத்து கொள்ளுவதில் தவறில்லை.பல தனி நபர்கள் சிறு வயதில் படிப்பதற்கு ,வசதியில்லாமல் ,சிரமப்பட்டு ,பிற்காலத்தி மிக சிறந்த நிலைமைக்கு வந்து முன்னோடியாக உள்ளார்கள்.எனது எழுத்து துறையில் ,நான் பிற பிரபல எழுத்தாளர்களை ,முன்னோடியாக வைத்து ,என் அறுபது வருட பயணத்தை தொடர்ந்து வருகிறேன் என்பதை இங்கு மிக பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்..அவர்கள் ஆர்...கே.நாராயணன்,ராகி.ரங்கராஜன் ,சுஜாதா,அகிலன்,ந .பார்த்தசாரதி ,சாவி,தேவன்,கடுகு,மற்றும் பல பிரபல எழுத்தாளர்கள். எல்லோருக்கும் ,சன்மானம்,மற்றும் விருதுகள் கிடைப்பதில்லை.எல்லா தொழிலும் .இருப்பினும் ,தனி நபர்கள் ,தங்கள் ,குறிக்கோளை ,கடைபிடித்து தங்கள் முயற்சியை கைவிடுவதில்லை.இன்று நான் குறிப்பாக பாராட்டும் இந்த தனி நபர்களுக்கு எனது பணிவான பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.முயற்சி உடையார் என்றும் தோற்றதில்லை.அவர்கள் ஜெயித்து கொண்டுதான் இருப்பார்கள் மற்றவர்கள் அவர்களை அங்கீகரித்தலும் சரி ,இல்லை என்றாலும். இன்று இவர்களை பற்றி என் வலை தளங்களில் பதிய ஆசை படுகிறேன். அன்புடன் கே.ராகவன் மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும் வரை 3-6-24

No comments: