Wednesday, September 11, 2024

Story Poongulam.

பூங்குளம் இயற்கை தாயின் எழில் கோலம் பூண்டு விளங்கும் ,ஒரு அழகான ,அமைதியான ,முன் உதாரத்துடன் விளங்கும் இடம்.கிராமமும் ,நகரமும் இல்லாமல் தனி தன்மை வாய்ந்த இடம்.எல்லா வசதிகளும் ,பொருந்திய இடம்.இந்த அழகிய இடத்தை மூன்று புள்ளிகளின் ,சொல்லிற்கு கட்டுப்பட்டு இயங்கிக்கொண்டு இருப்பது பலருக்கு ஆச்சரியம்.மூன்று புள்ளிகள்,சிவா ,விஷ்ணு,,பிரம்மா என அழைக்கப்படும்,ஓய்வு பெற்ற ஹெட்மாஸ்டர்,தங்கவேலு,போஸ்ட் மாஸ்டர் சுந்தரேசன்,ஸ்டேஷன் மாஸ்டர் ராமஸ்வாமி .தங்கவேலு விற்கு ஒரு அழகிய பெண் ,சுந்தரேசனுக்கு ,ஒரு பையன் ,ராமஸ்வாமி க்கு குழந்தைகள் இல்லை.அவருக்கும் ,அவரது மனைவி பத்மாவிற்கும் இந்த இரண்டு பேர்கள் மீது ஆசையும் பாசமும்.மூன்று பேரும் நல்ல ,நண்பர்களாக,ஊரை ,மேன்படுத்த மிகுந்த ஆசையுள்ளவர்கள்.கல்வி தான் அவர்களின் குறிக்கோள்.ஒவ்வொரு சிறுவர்களும் ,நன்றாக படிக்க வேண்டும்,ஹை ஸ்கூல் ,காலேஜ் ,போன்ற வசதிகள் உள்ள இடம்.சிறுவர்கள் ,தங்கள் ஊரில் தான் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் காலேஜ் உருவாக்கியவர்கள்..அன்று வழக்கம் போல் தங்கவேலுவின் மகள் போஸ்ட் ஆஃபீஸிற்கு வந்து சுந்தரேசனிடம் , மாமா ,சௌக்கியமா,மாமி எப்படியிருக்கிறார்கள் , ,கண்களால் யாரையோ ,நோட்டம் vittaal.அது வேறு யாரும் இல்லை .சுந்தரேசன் மகன் ராமன் தான்.இருவரும் சிறுவயதில் இருந்து ,ஒருவருக்கு ஒருவர் ஆசையுடனும் ,நட்புடனும் பழகி அது இன்றும் தொடர்கிறது.உள்ளேயிருந்து அவர் மனைவி ,கௌரி ,சீதா வாம்மா ,என்ன சாப்பிடுகிற ,இன்னிக்கு கேசரி பண்ணேன் ,கொஞ்சம் சாப்பிடு ,உள்ளே வா.சீதாவிற்கு ,எதுவும் காதில் ஏறவில்லை.அவள் கண்கள் ,இமைத்துடிப்புடன் ராமனை வலை போட்டு தேடியபடி இருந்தால்.தட்டில் கேசரி வந்தவுடன் தான் ,அவளுக்கு நினைவு வந்தது.கேசரியின் மணம் ,சீதாவின் மூக்கை துளைத்தது.ராமன்,ஒரு கம்பெனியில் தேர்வு செய்து ,அமெரிக்கா வர இன்று உத்திரவு வந்ததினால் ,கேசரி பண்ணேன்.ராமன் சீதா ராமா ஆஞ்சநேயர் கோவிலுக்கு இப்போதான் போனான்..சீதாவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ,அவன் அமெரிக்கா வேலை மனதை நெருடியது.என் கேசரி பிடிக்கலயா ,என்று ராமனின் தாய் நினைவு படுத்தினவுடன் இந்த உலகத்துக்கு வந்தாள் சீதா.எடுத்துகிறேன் மாமி ,என்று டேஸ்ட் பண்ணினாள்.மாமி kai மனம் கேட்கவேண்டுமா என்ன,மேலும் ஒரு கரண்டிsapitaal சீதா.சரி ,மாமி நான் போயிடு வருகிறேன்.இரு குங்குமம் வாங்கிண்டு போ.குங்க ம் அவள் நெற்றிக்கு மேலும் அழகு சேர்த்து.நீண்ட கூந்தல் ,தலையில் மல்லிகை பூ ,என்று அழகாக இருந்தாள் சீதா.கருப்பு புடவையும் ,அழகுக்கு அழகு சேர்த்து ப்ரகாசித்தாள் .வழியில் ராமனை பார்த்தாள் .விழிகள் படபடக்க ,அவனை பார்த்தாள் .ராமனும் நல்ல பெர்சோனால்ட்டி,உயரம்.எங்கேய அம்மா இவ்வோளவு தூரம் ,நக்கலாக கேட்டான்.மாமா ,மாமியை பார்க்க வந்தேன்.அப்படியா, ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கிறேயே ராமா ,என்று ஆசையாக kettal சீதா.இருவரும் பத்து நிமிடம் பேசிவிட்டு பிரிந்தனர்.சீதா வீட்டில் நுழையும் போதே ,அம்மா,உனக்கு நூறு ஆயுசு.இப்போதான் நானும் அப்பாவும் ,உன் கல்யாண விஷயமா பேசிண்டு இருந்தோம் .ஒரு பிள்ளை வரன் வந்திருக்கிறது ,ஜாதகமும் பொருந்தியிருக்கிறது ,அடுத்த வாரம் உன்னை பார்க்க வருகிறார்கள்.சீதாவிற்கு ,அதிர்ச்சியாகஇருந்தது.இப்போ ன்ன அவசரம்,.அதற்குள் அப்பா தங்கவேலு,பிள்ளை நல்ல இடம்,மேலும் அவர்கள் குடும்பம் நல்ல பெயர் பெற்ற குடும்பம்.பிள்ளை போட்டோ ,நேரிலும் அழகாக இருக்கிறான்.சென்னையில் ,வேலை பார்க்கிறான்.நம் kulam ,திருநெல்வேலி சைவ பிள்ளை என்றார் அப்பா..சீதாவுக்கு தன எண்ணத்தை எப்படி சொல்வது ,என்று பயமாக இருந்தது.சற்று யோசித்து சொல்கிறேன் என்று ,அப்போதைக்கு தட்டி கழித்தாள் மறு நாள் காலை சுந்தரேசன் ,மற்றும் அவர் மனைவி தட்டில் வெத்திலை ,பாக்கு ,பழத்துடன் வந்தார்கள்.உடனேயே,தங்கவேலு,நாம் இருவரும் இருபது வருடமாக ,நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.ராமனுக்கு அமெரிக்கா வில் வேல கிடைத்து இன்னும் ஒரு மாதத்தில் போக வேண்டும்.அதற்கு முன் ராமனுக்கும் ,சீதாவிற்கு கல்யாணம் பண்ண எங்களுக்கு விருப்பம்.தங்கவேலுவிற்கு ,ஷாக்காக போய்விட்டது.என்ன சொல்றேய் சுந்தரேச,நீ veru ஜாதி நான் வேறு,சுந்தரேசன்,நட்பும் ,பழக்கமும் ,ஜாதி முன்பு கால் தூசி.உன் சம்மதம் முக்கியம்.தங்கவேலு மனைவிக்கு பரம சந்தோசம்.ஆனால் ஒரே மகளை அமெரிக்காவிற்கு அனுப்ப மனமில்லை.சுந்தரேசன்,ராமன் அமெரிக்கா போய் நிறைய சம்பாதித்து வந்து இங்கு ஒரு பெரிய ,கம்பெனி உருவாக்கி ,இளைஞர்களுக்கு ,வேலை கொடுக்க வேண்டும் என்ற லக்ஷியம்.seven ஆண்டுகளில் திரும்பி வந்து விடுவான்.பூங்குளம் விரிவாக வேண்டும்.எல்லா கிராமங்களுக்கும் ,உதாரணமாக இருக்க வேண்டும்.இந்த எண்ணம் நம் மூன்று பேர்கள் மூலமாக ,அவன் மனசிலே ஆழமாக படிந்து விட்டது.இன்று தான் சொன்னான் .நீ என்ன சொல்லறெய.தங்கவேலுக்கு ,ஆனந்தம் தாங்கவில்லை.பூங்குளம் ப்ரசித்தியடையவேண்டும் என்ற ஒரே குறி ,இந்த சம்மந்தித்தின் மூலம் naada போகிறது ,ஏழு வருடத்துக்கு பிறகு.உடனே தட்டை மாற்றி கொண்டு ,நண்பனை இறுகி தழுவிக்கொண்டார்.பிறகு என்ன,பத்து நாளில் ,சீதா ராமா கல்யாணம் ஜாம் ,ஜாம் என்று மிக சிறப்பாக பூங்குளம் வாசிகள் முன்பாக அதி விமரிசையாக நடந்தது.எப்போ ,இந்த கல்யாணம் சிறப்பாக நடந்ததோ ,அதே போல் ஏழு வருடத்துக்கு பிறகு ,பூங்குளம் உலக அளவில் மிக பெரிய சாதனை ,செய்யப்போகிறது என்று நான் சொல்ல வேண்டுமா? கே.ராகவன் பெங்களூரு

No comments: