Friday, October 8, 2021

Tribute 682.

Tribute 682. தயாரிப்பாளர் ,நண்பர் , மறைந்த இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் அவர் மகன் முக்தா ரவி அவர்களுக்கு பாராட்டு.682 . இனிமையாக பழகக்கூடியவர்,எளிமையானவர், மூக நூல் மூலமாக எனக்கு கிடைத்த ஒரு அரிய நண்பர் ேறு யாரும் இல்லை முக்தா ரவி அவர்கள்தான்.பத்து ஆண்டுகளுக்கு மேல் எனக்கு தொடர்பு கணினி மூலமாகவும் ,சமூக வலை தளம் மூலமாகவும் நெருக்கமானது.நான்கு வருடங்களுக்கு முன் சென்னையில் அவர் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன்.சிறிது நேரம் அவர் அண்ணா நகர் இல்லத்தில் அளவளாவி விட்டு ,என்னையும் என் மைத்துனரையும்எங்கள் இல்லத்தில் ,விட்டு சிறிது நேரம் அளவளாவி விட்டு புகை படமும் ,எங்கள்குடும்பத்தாருடன் எடுத்து கொண்டது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான சம்பவம்.அதன் பிறகு எங்கள் நட்பு தொடர்ந்தது.சிறு வயதில் இருந்து எனக்கு தமிழ் மீது அளவுகடந்த பற்று கதை ,கட்டுரைகள் எழுதுவேன்.பெரும்பாலமான முக்த ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கிய படங்களை கண்டு கழித்திருக்கிறேன். பிற்காலத்தில் அவர் மகனை நேரில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. சமீபத்தில்முக்தா பிலிம்ஸ் அறுபது ஆண்டு நிறைவு விழாவிற்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணசேனனுக்கு பாராட்டு விழாவை மிக சிறப்பாக அவரும் ,சகோதரர் சுந்தர் ,சகோதரி மாயா அவர்கள் மற்றும் குடும்பத்தார் கொண்டாடியதை பார்த்து அக மகிழ்ந்தேன். நடிகர் திலகம் குடும்பத்தார் எவ்வளவு அன்பும் ,பாசமும் மறைந்த இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் குடும்பத்தார் மீது வைத்திருப்பதை கண்டு மகிழ்தேன்.அது போல் நண்பர் ரவியும் சிவாஜி கணேசன் முத்த மகன் ராம் குமாரை தொடக்க விழாவிற்கு அழைத்து கௌரவித்ததை கண்டு ஆனந்தப்பட்டேன்.நட்பிற்கு என்றும் அழிவில்லை என்பதை அனுபவ பூர்வமாக பார்த்தேன் இந்த விழாவினை மிக சிறப்பாக நடத்திய நண்பர் ரவி குடும்பத்தினர் மற்றும் விழாவிற்கு சொற்பொழிவாற்ற வந்த ,எழுத்தாளர்களும் மற்றும் பல திரை உலக நட்சத்திரங்களும் வந்து சிறப்படைய செய்தது முக்தா ஸ்ரீனிவாசன் என்ற மா பெரும் மனிதர் அவர் மீது வைத்திருந்த பற்றுதலினால் என்றால் மிகை இல்லை. ரவி தயாரித்த ராஜா பாண்டி படத்தை ஒரு வருடம் முன்பு பார்த்து ரசித்தேன்.தரமான தயாரிப்புக்கு பெயர் பெற்ற முக்தா பிலிம்ஸ் நிறுவனம் ,ராமசாமி ,ஸ்ரீனிவாசன் என்ற சகோதரர்களால் அறுபது வருடங்களுக்கு முன்பு தொடங்கி இன்று இமயம் போல் நம் முன் நிற்கிறது.. தவப்புதல்வர்களான ரவியும் சுந்தரும் மீண்டும் ரசிகர்களுக்கு நல்ல அருணோதயமாக ,சிரிப்பு தேன் மழை ஆனாலும் சரி சூர்ய காந்தி போன்ற தரமான படங்களை கொடுத்து இந்த ஸ்தாபனம் இன்னும் பல விழாக்களை பார்க்க வேண்டும் என்று மனமார ஆசிர்வதித்து இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.என்னுடைய இந்த பிளாகுகள் இல் பிரதி திங்கள் அன்று சாதனை புரிந்தவர்களை பற்றி நான் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து எழுதும் பதிவு. இன்று ரவி முக்தா அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.ரவி அவர்கள் துணைவியார் மற்றும் தாயார் ,சகோதரர் சுந்தர் குடும்பத்தார் சகோதரி மாயா குடும்பத்தார் எல்லோரும் சகல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புடன் கே.ராகவன் See You Next WEek, 11-10-21 www.ragavan-creativity.blogspot.com write2ragavan.wordpress.com www.tumblr.com commonman

No comments: