Tuesday, July 27, 2021

Needed at this hour.

 வெகு நேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை என்ற ஏக்கம் ஒரு புறம் உறுத்த மற்றொருபுறம் எப்போது வந்து தன்னை அனைத்துக்கொள்வாள் என்று ஏங்கி தவித்து கொண்டிருந்தான் நம் நாயகன் ராமு.ஒரு மணி காலம் ஆகியும் அவள் வரவில்லை ,ஒரு பக்கம் வாழ்க்கையில் வெறுப்பு மற்றொருபக்கம் கோரான பயம்.கடைசியில் அரைமணி நேரம் கழிந்து  அவள் வந்து அவனை தழுவிக்கொண்ட பிறகு அவனுக்கு சந்தோஷமும் நிம்மதியும்  ஏற்பட்டது. பிறகு ஆனந்தமாக உறங்க ஆரம்பித்தான் .அவன் எதிர்பார்த்த அழகி வேறு யாரும் இல்ல  .துயில் கன்னி தான், தினம் அவள் வராமல்  எத்தனை உள்ளங்கள் தவிக்கும் என்பது அறிந்தவர்களுக்கு தான் தெரியும். துயில் கன்னி தினம் எல்லோருக்கும் வரவேண்டும் என்பது என் பிரார்த்தனை இந்த கொரோனா காலகட்டத்தில்.

கே.ராகவன் 

27-7-21

No comments: