Friday, May 15, 2015

Story 1.

சிறுகதை 1. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை வெகு நாட்களாக எதிர்பார்த்த விசா வந்தது ராமுவிற்கு.அவன் கால்கள் தரையில் நிற்கவில்லை .ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு.விசா பேப்பரை தன குல தெய்வமான ஸ்ரீனிவசரிடம் வைத்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டான். பிறகு தாய் தந்தை, இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிகொண்டான் . அமெரிக்காவிற்கு தான் போகபோகிறோம் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை .ஒரு ஜோஷியனும் கணிக்கவில்லை அவன் போவதை பற்றி.அவனது பெற்றோர்கள் ஆசிர்வாதம் ஒன்று தான் கை கொடுத்தது. சிறு வயதிலயே ராமு படிப்பில் ,அசகாய சூரன்.எல்லா நல்ல குணங்கள் அவனிடம் இருந்தாலும் ,மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை முக்கியமாக தந்தை தரும் அறிவுரைகளை. இந்த நல்ல விஷயத்தை தன் காதலியிடம் சொல்ல மனசு பரபரத்தது மொபைலில் அவளிடம் சொல்ல நினைத்து பிறகு நேரில் சொல்லலாம் என்று அதை ஒத்தி வைத்தான் .அன்று சாயங்காலம் கனகாவை மீட் ,பண்ணி தன அமெரிக்க பயணத்தை அவித்து விட்டான் கனகாவிற்கு ரொம்ப சந்தோசம் -:கங்கிராஸ் ,என்று பத்து தடவை அவன் கையை பிடித்து உலுக்கி விட்டாள்.பிறகு ஒயிலாக எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் கிபிட் வேண்டும் என்று ஸ்மார்ட்டாக போட்டாள் .இன்னும் ஏர் இந்தியவில் ஏறி உட்கார வில்லை அதற்குள் கிபிட் கேட்கிறாளே என்று எண்ணம் தோன்றினாலும் இது ஒரு சாதாரண கிபிட் தானே என்று பெருமிதம் கொண்டான் ராமு.ஓகே ,டன் என்று சொல்லி விட்டு விடை பெற்றான் .முதல் சம்பளத்தில் ,வங்கி அனுப்புவதாக ப்ரோமிசும் செய்து விட்டான்.எல்லா ,நண்பர்களுக்கும் சந்தோசம் அவன் அமெரிக்கா,போவது.எல்லா துணிமணிகளும் , முக்கியமான சாமான்களும் ,இந்தியாவிலே யே வாங்கிகொண்டு போ என்று முன்னால் அமெரிக்க சென்ற நண்பர்கள் அறிவரை வேறு ,மைல்களில் ,அபிரிமிதமாக ,அள்ளி தெளித்து விட்டார்கள் .குறிபிட்ட ஊருக்கு போகும் ,நாளும் வந்தது .வாசலில் ,ஒல டக்ஸ்யும் வந்தது.அப்பா அம்மா ,இருவரையும் நமஸ்காரம் செய்தான் .அவன் அப்பா ,எல்லா வற்றையும் ,எடுத்து கொண்டியா,ஒரு தடவை செக் பண்ணிக்கோ.ஓகே.,அப்பா ,எல்லாம் எடுத்து கொண்டியன் . அவன் அம்மா அவன் கிட்ட வந்து, இது வரைக்கும்டாலரை கழுத்திலே போட்டுண்டு இருந்தே .இனிமேல் நிஜ டாலர் பக்கபோறது எனக்கு ரொம்ப சந்தோசம். ஜாக்கிரதை யாக போய்விட்டு வா என்று ஆசிர்வாதம் செய்தாள்.யெஹ் ,என்று அதை அமோதித்து விட்டு ,ஏர் போர்ட் வந்தான் உள்ளே கனகா அவனுக்காக,காத்திருந்தாள் .ராமு ,போய் மெயில் பண்ணு , என்னை மறந்துடாதே.ஹொவ் கேன் ஐ போர்கேட் யு ,என்று சொல்லி விட்டு ,எப்போ வரேன் என்று தெரியவில்லை ,நீ ,உடம்பை பாத்துக்கோ. ஓகே.,நான்,அவசரமாக ஆபீஸ் போகணும் ,பாய் ,டேக் கேர். கனகா போனவுடன் , உள்ளே செக்கிங் கவுன்ட்டருக்கு வந்தான். சார் ,ப்ளீஸ் டிக்கெட் ,பாஸ்போர்ட் . கோட் பாக்கெட்டில் கையை விட்ட ராமுவுக்கு பகிரென்றது .டிக்கெட் பாஸ்போர்ட் ஒன்றும் இல்லை .அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டான் .விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி தான் இருந்தது .கிளம்பும் போதும் லேட்டாக கிளம்பினான் .அவன் அப்பா சிக்கிரம் கிளம்பு என்று சொன்ன போதிலும் .வழியில் தாமதமாகி விட்டது , அவன் அமெரிக்க பயணம் ,தடை பட்டது அப்போது தான்,அவனுக்கு அப்பாவின் அறிவுரை நினைவு வந்தது.என்ன செய்வது .பெரியோர்கள் சொல்வதில் உண்மை உண்டு என்பதை உணர்ந்து கொண்டான். கே.ராகவன்

No comments: