Tuesday, September 2, 2014

My Comment in Thendral USA IN sep.14.

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு  தங்களின் ஆகஸ்ட்  இதழ்  அற்புதம்.
வரதராஜனின்  நேர்முக  அறிமுகம் நன்றாக இருந்தது. வங்கியில் வேலை பார்க்கும் நாட்களில் இருந்து இன்னமும் நாடகத்தில் அவர் சேவை தொடர்ந்து கொண்டிருப்பது பாரட்டதக்க  வேண்டிய விஷயம். 
தொலை காட்சியில் அவரின் வாசிப்பு அழகிய உச்சரிப்புடன்  எல்லோரையும் கவர்ந்து  கொள்ளை கொண்டிருப்பதில்  வியப்பு இல்லை.அரசியல் ,சினிமா பிரமுகர்கள் அத்தனை பெரும் அவர் மிது மிகவும்  நட்பும் மதிப்பும் வைத்திருப்பவர்கள்.இனிமையாக பழக  கூடியவர் .பல திரை படங்களிலும் பங்கேற்றவர். நாடகமேடையில் ,தனக்கென்று ஒரு பாணியை நிலை நிறுத்தியுள்ளார் என்று சொன்னால் மிகையில்லை .பிரபலங்கள் சோ ,பாலச்சந்தர் ,போன்றவர்களிடம் பாராட்டு பெற்றிருப்பவர் .இவரின் நேர்முக   அறிமுகத்தை வாசகர்களுக்கு ,அளித்த ஆசிரியர் குழு அவர்களுக்கு என் பாராட்டுகள்.
ஒவ்வொரு ,மாதமும் தென்றல் சுகம் மிக அழகாக உள்ளது.
கே.ராகவன் 
டென்வர்
கொலராடோ

No comments: