Wednesday, September 29, 2021

Reply to my friend Ravi Muktha.

அன்புள்ள ரவி அவர்களுக்கு உங்கள் செய்தி கிடைக்க பெற்றேன்.மிக்க மகிழ்ச்சி .முக்தா பிலிம்ஸ் இந்த ஒன்பது நாட்கள் நவராத்ரி விழாவில் ஒரு தலை சிறந்த நடிகன்,தேசப்பற்று மிக்க மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்து பல பேச்சளர்களை அழைக்க இருப்பது உண்மையிலேயே மறைந்த நடிகர் திலகம் அவருக்கு செய்யக்கூடிய தலையாய கடமை மற்றும் .அவர் சிறப்பாக நடித்த நவராத்திரி படத்தேயே இதற்கு முன்னோடியாக வைத்து இருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம். சிறிது நேரம் உங்கள் துவக்க உரையை எப்படி சிவாஜி கணேசனுக்கு இரண்டு கண்கள் என்பதை கேட்டு பரவசப்பட்டேன்.அதற்கும் மேலாக அவர் பெரிய மகன் ராம் குமாரை முதல் நாள் துவக்க விழாவில் அழைத்து பெருமை படுத்தியது எப்படி உங்கள் தந்தை சிவாஜியிடம் இருந்தது போல் நீங்கள் ராம் குமார் அ வர்களிடம் காட்டியது உங்கள் குடும்பத்திற்கும் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கும் உள்ள பாசத்தையும் ,நட்பையும் காட்டு கிறது.ராம் குமார் மிகஎளிமையாக ,அடக்கமாக தன இரு கண்களை விமர்சித்தது என்னை மெய் சிலிர்க்கவைத்தது.இந்த நிகழ்ச்சியை நான் கண்டு கழிப்பேன்.இந்த விழா மிக பெரிய வெற்றி அடைய ,முக்தா பிலிம்ஸ் குடும்பத்தினர் அனைவரையும் முதலிலேயே வாழ்த்துகிறேன். அன்புடன் நண்பன் கே.ராகவன் பெங்களூரு

No comments: