Sunday, January 21, 2024

Tribute 802.

இந்நன்னாளில் உலகமே போற்றும் பாரத தேசமும் ,அதை நிர்வகிக்கும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் எண்ணற்ற மந்திரிகளும்,,தொழில் வல்லுனர்களும்,சிற்பிகளும் ,மற்றும் இந்த புனித ராமர் கோவில் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்களையும் ,ஒவ்வொரு இந்திய குடிமகனும் நன்றியுடன் பாராட்டுகிறதில் வியப்பில்லை.உலக சாதனை படைத்தது பாரத தேசம் என்று சொன்னால் ஆச்சரியமில்லை.ஆண்டாள் நாச்சியார் ,தந்தை பெரியாள்வார் ,இறைவனுக்கு பல்லாண்டு பாடியது போல் பிரதமருக்கும் அவரது குழுவிற்கும் பாரத தேச மக்கள் பல்லாண்டு பாடுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.இன்று பாரத தேசத்திற்கு ராம ராஜ்ய பரிபாலனம் தொடங்கியுள்ளது.மக்கள் எண்ணங்களையும் அவர்கள் நம்பிக்கையையும் ,இந்த அரசு நிறைவேற்றும்.மக்கள் அன்புடன்,ஒருவரொருவரை நட்பும் பாசத்துடனும் பழகுவார்கள் என்பதில் சந்தேகமில்லை .ராம ராஜ்யம் உருவாகிவிட்டது.அயோத்தி மென்மேலும் பெயர் பெற்று ,வணிக,சுற்றுலா ,திவ்ய திருத்தலங்களில் புகழ் பெரும் என்றஆழ்ந்த நம்பிக்கையுடன் எல்லா சகோதரர்கள்,சகோதரிகளுக்கும் என் பணிவான வணக்கத்தை இந்த மடல் மூலம் தெரிவித்து கொள்ளுகிறேன்.வாழ்க ராமர் கோவில் .இந்த அரசு எல்லா நல்ல காரியங்களையும் ,செய்து .சூரிய ,சந்திர மண்டலத்துக்கு போயிருந்தாலும் ,அதை விட காணாத இந்த செயல் அதிசயம்,நம்பிக்கை,விடா முயற்சி,மேலாக தேசப்பற்று உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் பாராட்டு. அன்புடன் இந்திய குடிமகன். ராகவன்.

No comments: