Wednesday, January 10, 2024

Old Memories.

மறக்கமுடியாத அனுபவம் எல்லா அனுபவங்களும் இன்பமானவை ,ஆனால் சில அனுபவங்கள் மறக்கமுடியாத ஒன்று.சமீபத்தில் என் அனுபவம் இன்பமான ஒன்று.நாற்பத்திஐந்து வருடத்திற்கு முன் மதுரையில் நான் ஒரு பிரபல மருத்துவ கம்பெனியில் பணி புரியும் போது என்னுடன் சேர்ந்து பணிபுரிந்த நண்பர்களை மார்ச் ஏழாம் தேதி சென்னையில் சந்தித்து செலவழித்த இன்பமான நேரத்தை ,அனுபவத்தை இங்கு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நண்பர்களின் முகம் காலத்தினால் மாறிவிட்டாலும் பழகும் விதம் அன்று இருந்ததை போல் இருந்ததை கண்டு மகிழ்ந்தேன்.ஒவ்வொரு நண்பரும் வாழ்க்கையில் பல அரிய காரியங்களை செய்து நல்ல பதவியில் இருந்து ,நல்ல பெயருடன் ஓய்வு எடுத்துக்கொண்டதை கண்டு அகமகிழ்ந்தேன்..நண்பர்களின் ,மகன்,மகள் பேர குழந்தைகள் நல்ல ,நிலையில் இருபத்திருப்பதை பார்த்து சந்தோசப்பட்டேன் .நாங்கள் கழித்த காலத்தில் ,சந்தித்த மருத்துவர்கள் ,மற்றும் உண்டு கழித்த சிற்றுண்டி சாலைகள் ,உணவகம்,பார்த்த திரை படங்கள் ,முக்கியமாக மாயா ஜால மன்னன் விட்டலாச்சார்யா திரைப்படங்களும் இடம் பெற்றன.அன்று இருந்த சந்தோஷமும் ,திருப்தியும் இன்று இல்லை என்பதையும் அவர்கள் மூலமாக அறிந்தேன் என்னையும் சேர்த்து.மதுரையில் காலடி வைத்தவர்கள் எவரும்சோடை போனதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அன்று அதை உண்மையில் உணர்ந்தேன்.காலம் எங்களை இவ்வளவு வருடங்கள் ,பிரித்து இருந்தாலும்,அன்றைய சந்திப்பு எல்லா கடந்த கால வாழ்க்கையையும் அறியவைத்ததில் வியப்பில்லை.முடிவில் ஒன்று கூற ஆசைப்படுகிறேன்.மருத்துவபிரிதிநிதியாக பணியாற்றியஎந்தநபரும் ,எந்த தொழிலிலும் தங்கள் முத்திரையை பதிப்பார்கள் என்பது உண்மை என்றுஇந்த சந்திப்பின்மூலம் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.நீங்களே சொல்லுங்கள் இது மறக்கமுடியாத அனுபவம் தானே. அன்புடன் கே.ராகவன். 13-3-23

No comments: