Saturday, May 22, 2010

SingaPore Payanakkaturai. 6.

சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 6 முத்திரை என்று சொன்னவுடன் ,எனக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் ,இங்கு தங்க அனுமதி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள என் பாஸ்போர்ட் பார்த்து உறுதி செய்து கொண்டியன். மற்றும் ,ஒரு எதிர் பாரத நிகழ்ச்சி என்னை புல்லரிக்க வைத்தது. துபாயில் எனக்கு ஒரு முறை பெரிய ஷாப்பிங் மாலில் ,அறிமுகமான ஒரு இத்தாலி தேசத்தவர் ,என் பெயரை சொல்லி அழைத்ததுதான். ஒரே ஒரு முறை போன வருடம் ,துபாய் சிட்டி சென்டர் என்கிற மாலில் அவர் என்னிடம், வழி கேட்டார் .அப்போது பேசுகையில் அவர் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு ,ஒரு இடத்திற்கு போக வழி கேட்டார். நான் வழி கூறிவிட்டு ,என்னை அறிமுக படுத்திகொண்டு என் முக வரி அட்டையை அவரிடம் கொடுத்தியன் அதில் இருந்த பெயரை ,ஞாபகம் வைத்து ,என்னை ப்ள்சா சிங்கப்பூர் மாலில் அழைத்தது ,உண்மையிலயே பிரமிக்க வைத்தது.நானும் அவரை ,அவர் பெயர் கார்லோ முசோலி ,என்று அழைத்தவுடன் ,அவர் முகத்தில் புன்ன கை பூத்தது s அவர் தன்னை அறிமுகபடுத்தி கொண்டபோது ,நான் அவரிடம் சொன்னியன் ,எனக்கு பிடித்த உங்கள் தேசத்து ,மறைந்த தயாரிப்பாளர் கார்லோ பாண்டி ,எனக்கு பிடித்தவர் உங்கள் பெயரும் கார்லோவில் இருப்பதால் நாம் எங்கு சந்தித்தாலும் உங்கள் பெயர் எனக்கு ஞாபகம்,இருக்கும் என்று சொன்னியன்.அவர் பெயரை நான் அழைத்ததும் ,அவருக்கும் மிகவம் சந்தோசம் சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு ,கிளம்பினியன் .பல அனுபவங்கள் ,இந்த பயணத்தில் ,என்னை பரவசபடுதியது.  (வளரும் ) கே.ராகவன் May.23.010

No comments: