Sunday, May 2, 2010

Tribute to Madurai.

நான் இந்த மண்ணில் கழித்த பதினொன்று ஆண்டுகள் மறக்க முடியாத ஒன்று. மூன்று எழுத்து பெயர் கொண்ட இந்த மாநகரம் மதுரை. சங்ககால முதல் இன்று வரை தனி பெருமை பூண்டு விளங்கும் மாநகரம். அழகான அங்கயற்கண்ணி ஆலயம் கம்பிரமாக ,ஆரோகணித்து இருக்கும் நகர்.கூடல் அழகரும் ,கள் அழகரும்,குடி இருக்கும் மா நகரம். வெளி ,மாசி ,சித்திரை,ஆவணி வீதிகள் பார்க்க ,கண் கொள்ளா காட்சி. டிவிஎஸ் என்ற மா பெரும் ஸ்தாபனம் ,தோன்றிய நகரம் .புகழ் பெற்ற எர்ஸ்கின் மருத்துவ கல்லுரி ,தியாகராஜர் ,அமெரிக்கன் ,மதுரை கல்லுரி ,மதுரை ஆகியோர் பெருமை சேர்த்து தந்த நகரம்.மில் ஆலைகள் பலவும் ,வணிகமும் செழித்து ஓங்கும் இனிய நகரம். இப்படி பல அரிய ,பெருமைகள் கொண்ட நகரம் .அழகர் ஆற்றில் இறங்கும் ,வைபவமும் , உலக பிரசித்தி பெற்றவைஇன்னும் பல .பெருமைகளை ,தனக்குள் வைத்து கொண்டு கம்பிரமாக ,ஆரோகணித்து இருக்கும் நகரம்.
Regards.
K.Ragavan

No comments: