Saturday, June 28, 2014

Tribute to Sri Ranganathan.

ஒரு சுவாமி (பக்தர்) கண் பார்வைஅற்றவர் தினமும் தன் நண்பர் ஒருவரை கட்டாயபடுத்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிக்க அழைத்து செல்வார்.நண்பரும் தினமும் அழைத்து போவார் .ஒரு தினம் நண்பர் அந்த சுவாமியிடம் கேட்டார் ,உங்களுக்கோ பார்வை இல்லை ,அப்படி இருக்கும்போது எதற்க்ககாக தினமும் அரங்கனை சேவிக்க வருகிறீர்.
அதற்கு சுவாமி சொன்ன பதில் ,உண்மை அடியேனுக்கு பார்வை இல்லை 
என்னால் ரங்கனை செவிக்கமுடியாது .ஆனால் ரங்கன் என்னை பார்கிறான் இல்லையா அதற்குதான் தினமும் வருகிரியன் ,நான் பார்கவிட்டால் என்ன அவன் என்னை தினமும் பார்த்து ,கடாக்ஷிகிறான் இல்லையா
எனக்கு அந்த பாக்கியம் போதும் என்று சொன்னவுடன் நண்பர் அந்த சுவாமியின் விசுவாசத்தை நினைத்து நெகிழ்ந்து போனார். 
நண்பர் சொல்ல கேட்டு .
கே.ராகவன்.
டென்வர் 
US

No comments: